Friday, 10th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வெளிநாட்டில் வாழும் தமிழர் நலச்சங்க அறக்கட்டளைக்கு புதிய நிர்வாகிகள் தோ்வு

டிசம்பர் 27, 2023 04:50

ஜித்தா சவுதி, டிச.27: வெளிநாட்டில் வாழும் தமிழர் நலச்சங்கம் மற்றும்  வெளிநாட்டு வாழ் தமிழர் நல அறக்கட்டளைக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட உள்ளனா். இந்த சங்கம் மற்றும் அறக்கட்டளையில் சேவை மனப்பான்மையோடு சோ்ந்து பணியாற்ற விருப்பம் உள்ளவா்கள் தொடர்பு கொள்ள வேண்டுகோள் விடுத்துள்ளனா்.  

இது குறித்து நிர்வாகிகள் ஜெக்கிரியா, சுககுரு, தமீம் அன்சாரி, பாசில், சலீம்,.. (செய்தி) ஆடுதுறை முகமது அன்வர் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், வெளிநாட்டில் வாழும் தமிழர் நலச்சங்கம் ஜித்தா மண்டலத்தில் நம் குடும்பத்தில் பயணிக்கக்கூடிய அனைத்து நம் தமிழ் உறவுகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

இந்த வருடம் கடைசி மாதம் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறோம். ஆகையால் இங்கு வாழும் பாதிக்கப்படக்கூடிய தமிழர்களுக்காக சாதி, மதம், அரசியலுக்கு அப்பாற்பட்டு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நம் வாழக்கூடிய சவூதி அரசு சட்டத்திட்டங்களுக்கு கட்டுப்பட்டு முழு மனதோடு தமிழர்களுக்கு சேவை செய்ய முன் வரக்கூடிய சகோதர்கள் தங்களுடைய கருத்தை பதிவிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

தலைப்புச்செய்திகள்